நடிகை ஷிரத்தா கபூர் தற்போது ஒப்பந்தமாகியிருக்கும் ‘சாஹூ’ படத்தை முடித்து விட்டு அடுத்ததாக நடிக்கவிருப்பது ஒரு விளையாட்டு வீரங்கனையில் வாழ்க்கைச் சித்திரத்தில். யாரந்த வீரங்கனை தெரியுமா? 2012 ஆம் ஆண்டில் லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெண்கலம் பெற்றுத் தந்த பேட்மிண்டன் மங்கை சாய்னா நெய்வால் தான் அவர்.
ஷிரத்தா சமீபத்தில் ‘சாஹூ’ திரைப்பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் வந்திருந்தார். வேலையோடு வேலையாக அப்படியே தனது அடுத்த படத்தின் இன்ஸ்பிரேஷனான சாய்னாவையும் சந்திக்க வேண்டும் என்ற ஆசையில், கடந்த வாரம் சாய்னா வீட்டுக்குச் சென்றார் ஷிரத்தா கபூர். இதை சம்மந்தப்பட்ட இருவருமே அவரவர் இன்ஸ்டாகிராம் பதிவுகளில் புகைப்படமாகப் பதிவு செய்துள்ளனர்.
சாய்னாவின் வீட்டுக்குச் சென்ற ஷிரத்தா கபூர், அவரிடம் பேட்மிண்டன் பயிற்சி பெறுவது மாதிரியான புகைப்படம் ஒன்றை எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். அது மட்டுமல்ல சாய்னாவின் வீட்டிலிருந்தது குறைந்த நேரமே என்றாலும், அதையும் அருமையாகப் பயன்படுத்திக் கொண்டு சாய்னாவின் செல்ல நாய்க்குட்டி சாப்ஸியுடன் விளையாடி விட்டு, சாய்னாவின் அம்மா, அன்போடு சமைத்துப் போட்ட ஹைதராபாத் ஸ்பெஷல் வீட்டு உணவையும் ஒரு கை பார்த்து விட்டுச் சென்றிருக்கிறார்.
மகாநதி திரைப்படத்தில் எஸ்.வி.ரங்கா ராவ் வேடத்தில் மோகன்பாபு!
அரவிந்த் சாமி நடிக்கும் ‘நரகாசுரன்’ படப்பிடிப்பு தொடக்கம்!
உயிர் கொடுத்தாள் என் தோழி! செலீனா கோம்ஸ் சொன்ன நெகிழ்ச்சி சம்பவம்!
மகளிர் மட்டும் படத்துக்கு பெண்கள் அளித்துள்ள ரேட்டிங்!
‘அடி வாடி திமிரா’ பாடலில் முதல்முறையாக சூர்யா, ஜோதிகா மகள் தியா!