தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

புதிய ஹோண்டா கார் அறிமுகம்

புதிய தொழில்நுட்பங்களுடன் டபுள்யூஆர்-வி காரை ஹோண்டா நிறுவனத்தினர் பெங்களூரில் திங்கள்கிழமை அறிமுகம் செய்தனர்.

News image
Updated On :21 மார்ச் 2017, 3:00 am

புதிய தொழில்நுட்பங்களுடன் டபுள்யூஆர்-வி காரை ஹோண்டா நிறுவனத்தினர் பெங்களூரில் திங்கள்கிழமை அறிமுகம் செய்தனர்.

பெங்களூரில் திங்கள்கிழமை டபுள்யூஆர்-வி காரை அறிமுகம் செய்து வைத்த ஹோண்டா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு மூத்த துணைத் தலைவர் ஞானேஸ்வர்சென் பேசியது: சர்வதேச அளவில் நவீன தொழில்நுட்ப கார்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, ஹோண்டா நிறுவனத்தின் கார்களுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு அதிகமாகியுள்ளது.

எங்கள் நிறுவனத்தின் சார்பில் புதிய தொழில்நுட்பங்களுடன் டபுள்யூஆர்-வி காரை அறிமுகம் செய்து வைத்துள்ளோம். இந்த கார் இளைஞர்களை அதிகளவில் கவரும் என எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் 35 வயதுக்குள்பட்ட இளைஞர்கள் 65 சதவீதம் உள்ளனர்.

பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கும் இந்த கார், எரிபொருள் சிக்கனம் கொண்டதாகும். டபுள்யூஆர்-வி கார் 6 வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் இதன் விலை ரூ.7.90 லட்சத்தில் தொடங்குகிறது என்றார் அவர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.