கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு பார்வதிபுராவைச் சேர்ந்தவர் பவன் (29), கெம்பே கெளடாநகரைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ் (33), நவீன் (23). இவர்கள் 3 பேரும் இணைந்து ஹனுமந்தநகர் காவல் சரகம் ஸ்ரீராமாஞ்சநேயா குட்டதசாலை, கோபாலகிருஷ்ணா சாலையில் ஆயுதங்களுடன் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு பதுங்கியிருந்தனராம். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் அங்கு சென்று, 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கத்தி, உருட்டுக்கட்டை, 3 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து ஹனுமந்தநகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.