புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த முடியும்

நவீன சிகிச்சை முறையால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த முடியும் என்று நாராயணா ஹெல்த்சிட்டி, முஜும்தர்ஷா மருத்துவமையத்தின் குருதியியல் வல்லுநர் சரத் தாமோதர் தெரிவித்தார்.
Published on

நவீன சிகிச்சை முறையால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த முடியும் என்று நாராயணா ஹெல்த்சிட்டி, முஜும்தர்ஷா மருத்துவமையத்தின் குருதியியல் வல்லுநர் சரத் தாமோதர் தெரிவித்தார்.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை புற்றுநோய்  சோதனை முகாம் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 60 பேரை பாராட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியது:  புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த முடியாது என்ற தவறான எண்ணம் நம்மிடையே உள்ளது.  இது தவறான கருத்து.  தற்போது வந்து உள்ள நவீன சிகிச்சையால் புற்றுநோயைக் குணப்படுத்த முடியும்.  அதற்கு சாட்சியாக இங்கு 60 பேர் வந்துள்ளனர்.  வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். புற்றுநோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.  புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சைப் பெறுவதன் மூலம் அந்த நோயை முழுவதுமாக குணப்படுத்த முடியும் என்றார் அவர். 
   நிகழ்ச்சியில்,  புற்றுநோயியல் வல்லுநர் சுனில் பட்,  நடிகை ஹர்ஷிகா பூனாச்சா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com