மின் கம்பத்தில் லாரி மோதியதில் 3 பேர் பலி
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின் கம்பத்தில் லாரி மோதியதில் தொழிலாளிகள் 3 பேர் உயிரிழந்தனர்.
உடுப்பி மாவட்டம், பெரடூரில் ஞாயிற்றுக்கிழமை ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர மின் கம்பத்தில் மோதியது. இதில் மே 1-ஆம் தேதி பிரதமர் மோடி கலந்து கொள்வதற்காக மேடை அமைக்கும் பணிக்கு அழைத்து செல்லப்பட்ட தொழிலாளிகள் சித்ரதுர்காவைச் சேர்ந்த மூர்த்தி, அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் உள்பட மூவர் நிகழ்விடத்திலே உயிரிழந்தனர். காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஹிரியடுக்கா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
