
மழை பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு முதல்வர் குமாரசாமி அறிவுறுத்தியுள்ளார்.
கர்நாடகத்தில் குடகு தென்கன்னடம், ஹாசன், சிக்மகளூரு, சிவமொக்கா மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் இம்மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளன. மேலும் வெள்ளத்தில் பல இடங்களில் சாலைகள், பாலங்கள் மூழ்கியுள்ளன.
தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் வீடுகளை இழந்து பரிதவிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், மேலும் பல நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, மழை பெய்ய வாய்ப்புள்ள குடகு, தென்கன்னடம், ஹாசன், சிக்மகளூரு, சிவமொக்கா மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்களைத் தொடர்பு கொண்ட முதல்வர் குமாரசாமி, வெள்ள பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தினார்.
வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படாதவாறு தகுந்த நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் நிவாரண உதவிகளை உடனடியாக செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். நிலைமையை ஆராய்ந்து அதிகாரிகளுக்கு தக்க வழிகாட்டுதல்களை வழங்குமாறு மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுக்கு முதல்வர் குமாரசாமி அறிவுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






