அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

ஷிராடி வனப்பகுதி நெடுஞ்சாலையில்  5 மாதங்களுக்கு வாகனங்கள் செல்லத் தடை: அமைச்சர் எச்.டி.ரேவண்ணா

மழையால் பாதிக்கப்பட்டுள்ள ஷிராடி வனப் பகுதி நெடுஞ்சாலையில் 5 மாதங்களுக்கு வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது 

Updated On :20 ஆகஸ்ட் 2018, 9:30 am IST

மழையால் பாதிக்கப்பட்டுள்ள ஷிராடி வனப் பகுதி நெடுஞ்சாலையில் 5 மாதங்களுக்கு வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கர்நாடக மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் எச்.டி.ரேவண்ணா தெரிவித்தார்.
ஹாசனில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
குடகு,  தென் கன்னட மாவட்டங்களில் பெய்து வரும் கன மழையால் ஷிராடி வனப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தச் சாலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை சீரமைக்க ரூ. 130 கோடி அளவுக்கு நிதி தேவைப்படுகிறது. எனவே அடுத்த 5 மாதங்களுக்கு அந்த சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 
குடகு மாவட்டங்களில் மழையால் அனைத்து சாலைகளும் பழுதாகியுள்ளன. இதனால் அந்தப் பகுதியில் மக்கள் போக்குவரத்து இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 
அதேபோல குதிரேமூக் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 169-இல் மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் சார்முடி வனப்பகுதியில் உள்ள சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.