எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

8 திருட்டு வழக்குகளில் 12 பேர் கைது

பெங்களூரில்  8 திருட்டு வழக்குகளில் தொடர்புடையதாக,  12 பேரை போலீஸார் கைது செய்தனர்.  

Updated On :25 டிசம்பர் 2018, 8:05 am IST

பெங்களூரில்  8 திருட்டு வழக்குகளில் தொடர்புடையதாக,  12 பேரை போலீஸார் கைது செய்தனர்.  
பெங்களூரு மாநகர  வடகிழக்கு மண்டல போலீஸார்  மேற்கொண்ட விசாரணையில்,  8 திருட்டு வழக்குகளில் தொடர்புடையதாக 12 பேரை கைது செய்தனர். இவர்கள் இருந்து ரூ.1.60 கோடி மதிப்புள்ள பொருள்களை மீட்டிருந்தனர்.
மீட்கப்பட்ட  நகைகள்,  பொருள்களை திங்கள்கிழமை மாநகர காவல் ஆணையர் சுனில்குமார் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியது:-
 ரூ. 1.60 கோடி மதிப்புள்ள 6 கிலோ தங்க நகைகள்,  6 கார்கள், 4 இரு சக்கரவாகனங்களை போலீஸார் மீட்டுள்ளனர். பொதுமக்களுக்கு தங்கள் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது குறித்து பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை போலீஸார் நடத்தி வருகின்றனர். எனவே பொதுமக்கள் உடைமைகளையும், பொருள்களையும் பாதுகாத்துக் கொள்வதில் அலட்சியம் காட்டக்கூடாது. சிறப்பாக செயல்பட்ட தென்கிழக்கு மண்டல போலீஸாரை பாராட்டுகிறேன் என்றார். 
நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர் சீமந்த்குமார்,  வட கிழக்கு மண்டல துணை ஆணையர் கலா கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.