திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கெளரவ விரிவுரையாளர்களை பியூ கல்லூரிகளில் நியமிக்க முடிவு

பியூ கல்லூரிகளில் விரிவுரையாளர்களின் பற்றாக்குறையை சமாளிக்க கெளரவ விரிவுரையாளர்களை நியமிக்க கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது.

News image
Updated On :9 ஜூலை 2018, 2:56 am

DIN

பியூ கல்லூரிகளில் விரிவுரையாளர்களின் பற்றாக்குறையை சமாளிக்க கெளரவ விரிவுரையாளர்களை நியமிக்க கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது.
பியூ கல்லூரிகளில் போதுமான விரிவுரையாளர்கள் இல்லாததால்,  மாணவர்களின்கல்வியை வெகுவாக பாதித்துள்ளதாகப் புகார் எழுந்தது. 
இந்தப் பிரச்னையை சமாளிக்க பியூ கல்லூரிகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு கெளரவ விரிவுரையாளர்களை நியமிக்க கர்நாடக அரசு முடிவுசெய்துள்ளது. 
நிகழ் கல்வியாண்டில் 2,997 கெளரவ விரிவுரையாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதோடு,  அவர்களுக்கு மாத மதிப்பூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இவர்கள் அடுத்த ஆண்டில் மார்ச் மாதம் வரை பணியில் அமர்த்தப்படுவார்கள். 
தென் கன்னட மாவட்டத்தில் 217, மைசூரில் 154, ஹாசனில் 150, பெங்களூரு தெற்கில் 30, பெங்களூரு வடக்கில் 34, பெங்களூரு ஊரகத்தில் 40, குடகு மாவட்டத்தில் 44 கெளரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படவிருக்கிறார்கள்.
காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த 2 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நுழைவுத்தேர்வுகளை நடத்திய கர்நாடகதேர்வு ஆணையம், ஒருசில சட்டத்தடங்கல்களால் அதை தொடர முடியவில்லை. 
இந் நிலையில், தற்போது விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நுழைவுத்தேர்வை நடத்த புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வு நிறைவடைந்ததும் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, நேர்காணல் நடத்தப்பட்டு, பணி நியமன ஆணைகள் அளிக்கப்படும் என்று தெரிகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.