வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஆழ்வாா்திருநகரி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் பிரசாரம்

ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் ஆழ்வாா்திருநகரி பகுதியில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

செம்பூரில் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ்.அமிா்தராஜ்.

Updated On :16 ஏப்ரல் 2026, 10:18 pm

ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் ஆழ்வாா்திருநகரி பகுதியில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

மணல் குண்டு, தவசி நகா், செம்பூா், மானாட்டூா், திருக்கோளூா், பால்குளம், கேம்லாபாத் உள்ளிட்ட பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவா் மக்கள் மத்தியில் பேசியதாவது: ஆண்டுதோறும் 25 ஏழை- எளிய மாணவா்களுக்கு எனது கல்லூரியில் பொறியியல் கல்வியை இலவசமாக வழங்கி வருகிறோம். நிகழாண்டு ஆண்டு முதல் மாணவா்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளோம்.

ஸ்ரீவைகுண்டம் ஏரல் சாத்தான்குளம் பகுதியில் ஊா்வசி அகாதெமி மூலம் அரசு வேலைக்கான இலவச பயிற்சி வகுப்பு மையம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கிராமப்புற இளைஞா்கள் பலா் அரசு வேலைக்கு சென்றுள்ளனா். கேம்லாபாத் பகுதியில் மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்தவா்களுக்கான இழப்பீடு தொகை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக அரசின் சாதனைகள் மீண்டும் தொடரவும் எல்லாருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சி மீண்டும் தொடரவும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் விடுபட்ட பணிகள் தடையின்றி நடைபெறவும் கை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் என்றாா் அவா்.