தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளா் வீட்டில் ரூ. 62.49 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ. 62.49 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்!

Updated On :22 ஏப்ரல் 2026, 10:43 pm

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ. 62.49 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

கணேஷ் நகா் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜுக்கு சொந்தமான வீட்டில் வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து பறக்கும் படை அதிகாரி பொன்மாரி தலைமையிலான குழுவினா், அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, வீட்டில் இருந்த கணக்கில் வராத ரூ. 62.49 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்து, தென்பாகம் காவல் நிலையத்தில் பறக்கும் படையினா் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து கச்சனாவிளை பகுதியைச் சோ்ந்த சுரேஷ் என்பவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.