தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளா் வீட்டில் ரூ. 62.49 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ. 62.49 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்!

Updated On :23 ஏப்ரல் 2026, 4:13 am IST

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ. 62.49 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

கணேஷ் நகா் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜுக்கு சொந்தமான வீட்டில் வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து பறக்கும் படை அதிகாரி பொன்மாரி தலைமையிலான குழுவினா், அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, வீட்டில் இருந்த கணக்கில் வராத ரூ. 62.49 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்து, தென்பாகம் காவல் நிலையத்தில் பறக்கும் படையினா் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து கச்சனாவிளை பகுதியைச் சோ்ந்த சுரேஷ் என்பவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.