சட்டவிரோதமாக கைத்துப்பாக்கி விற்பனை செய்த நடிகர் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு எச்.ஏ.எல் காவல் சரகம் ஜெகதீஷ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு அருகில் சிலர் சட்ட விரோதமாக கைத் துப்பாக்கியை விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸார், கைத் துப்பாக்கியை விற்பனை செய்த , எச்.ஏ.எல் இஸ்லாம்பூரைச் சேர்ந்த முகமது நிஜாம் (25), ஹுப்பள்ளி கணேஷ்பேட்டையைச் சேர்ந்த ஜெகதீஷ் (31) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 2 கைத் துப்பாக்கி, 10 தோட்டக்களை பறிமுதல் செய்தனர். அவர்களுக்கு துப்பாக்கியை விற்பனை செய்ய உதவியதாக நியூதிப்ப சந்திராவைச் சேர்ந்த சதீஷ்குமார் (44), கொத்தனூருவைச் சேர்ந்த சையத் சமீர் (32) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் ஜெகதீஷ் கன்னட திரைப்படங்களில் கதாநாயகன் உள்ளிட்ட முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து எச்.ஏ.எல் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லி தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் விஜய்க்கு வரவேற்பு!

இன்றும் பேசப்படும் வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!
தமிழர்களின் இதயங்களை வென்ற பாரதிராஜா ஒரு பார்வை..!

விசாகப்பட்டினம் எஃகு ஆலை விபத்து: 9 ஆக உயர்ந்த பலி!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


