சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

பத்திரிகையாளர்களுக்கு சுய பரிசோதனை தேவை: சந்தோஷ் ஹெக்டே

பத்திரிகையாளர்களுக்கு சுய பரிசோதனை தேவை என்று லோக் ஆயுக்த முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்தார்.

Updated On :22 அக்டோபர் 2018, 4:08 am

பத்திரிகையாளர்களுக்கு சுய பரிசோதனை தேவை என்று லோக் ஆயுக்த முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்தார்.
பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள கன்னட சாகியத் பரிஷத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில்,  அவர் பேசியது:-
பத்திரிகைத் துறையில் உள்ளவர்கள் நேர்மையாகவும், தூய்மை உள்ளவர்களாகவும் விளங்குவது அவசியம்.  செய்த தவறுகளையும் அவ்வப்போது திருத்திக் கொண்டு தங்களை சுத்திகரித்துக் கொள்ள வேண்டும்.  இதனால் மட்டுமே அவர்களால் உண்மையாகவும், சிறந்த செய்திகளையும் மக்களுக்கு தர முடியும். 
அண்மைக்காலமாக பத்திரிகைத் துறையில் உள்ளவர்களிடம் புத்தகங்களை படிக்கும் பழக்கம் குறைவாக உள்ளது. இலக்கியங்களைப் படிப்பதால், மனித நேயம் அதிகரிக்கும். மனித நேயத்துடன் வரும் செய்திகளே சமூகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றார் சந்தோஷ் ஹெக்டே.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.