நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

சிவக்குமார சுவாமிகள் மறைவுக்கு கிறிஸ்தவ பேராயர் இரங்கல்

சித்தகங்கா மடத்தின் பீடாதிபதி சிவக்குமார சுவாமிகள் மறைவுக்கு பெங்களூரு கத்தோலிக்க மறை மாவட்ட பேராயர் பீட்டர் மச்சாடோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

Updated On :24 ஜனவரி 2019, 2:20 am IST

சித்தகங்கா மடத்தின் பீடாதிபதி சிவக்குமார சுவாமிகள் மறைவுக்கு பெங்களூரு கத்தோலிக்க மறை மாவட்ட பேராயர் பீட்டர் மச்சாடோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி: நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த சித்தகங்கா மடத்தின் பீடாதிபதி சிவக்குமார சுவாமிகளின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். சிவக்குமார சுவாமிகள், மிகச் சிறந்த ஆன்மிகத் தலைவராகவும், மனிதநேயவாதியாகவும், கல்வியாளருமாகவும் விளங்கினார். ஏழைகள், விளிம்புநிலை மக்கள் மீது அளவிடமுடியாத அன்பை பொழிந்துவந்த சிறந்த புனிதர் ஒருவரை நாடு இழந்துள்ளது. 
சமுதாயத்தில் ஜாதி, நிறம், பகுதி, மதத்தின் பெயரால் ஒடுக்கப்பட்ட, அநீதிக்குள்ளாக்கப்பட்ட எண்ணற்ற பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தைகளின் மீது புனிதரின் அன்பு நிலையாக இருந்ததை காலம் மறக்காது. சிவக்குமார சுவாமிகளின் மறைவால் சோகத்தில் மூழ்கியுள்ள அவரது பக்தர்களுக்கு பெங்களூரு கத்தோலிக்க கிறிஸ்தவ சமுதாயத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த சோகத்தை தாங்கிக் கொள்ளும் ஆற்றலை வழங்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன் என  அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.