குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

குல்மார்க்: கேபிள் கார்களில் பழுது - அந்தரத்தில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு!

கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!

News image

குல்மார்க்: கேபிள் கார்களில் பழுது - அந்தரத்தில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்பு! - PTI

Updated On :25 மே 2026, 10:57 pm IST

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் ஆசியாவின் உயரமான ரோப்வே கேபிள் கார் சேவைகளுள் ஒன்றான குல்மார்க் கோண்டாலாவில் திங்கள்கிழமை(மே 25) ஏற்பட்ட தொழில்நுட்ப பழுதால் சுமார் 300 பயணிகள் அந்தரத்தில் சிக்கி தவித்தனர்.

அவர்களை மீட்கும் பணிகளில் பேரிடர் மீட்புக் குழுக்கள் ராணுவ உதவியுடன் சம்பவ இடத்தில் தீவிரமாக ஈடுபட்டன. சுமார் ஆறு மணி நேரமாக நடைபெற்ற மீட்பு பணி இன்றிரவில் வெற்றிகரமாக முடிவடைந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 500 அடி உயரத்தில் உள்ள 65 கேபின்களில் சிக்கிய 300 பயணிகளை மீட்கும் சவாலான பணியை வெற்றிகரமாக முடித்த பேரிடர் மீட்பு குழுவினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், “காஷ்மீரின் குல்மார்க்கில் அந்தரத்தில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகளை பத்திரமாக மீட்டமைக்காக இந்தியாவின் பேரிடர் சேவை படைகளுக்குப் பாராட்டுகள்.

மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படைகளையும் ராணுவ வீரர்களையும் உள்ளூர் போலீஸார் மற்றும் அரசு நிர்வாகத்தையும் உள்ளடக்கிய பேரிடன் மீட்புக் குழுக்கள் 6 மணி நேர மீட்பு பணிக்குப் பின், 65 கேபிள் கார்களில் பரிதவித்த பயணிகளை மீட்டனர். அவர்களுடைய திறனுக்கு இந்த நாடு தலைவணங்குகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Rescue operations conclude in Jammu and Kashmir's Gulmarg after gondola malfunctions; all stranded passengers evacuated, officials say.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.