
கா்நாடகத்தில் கரோனா பாதிப்புக்கு வியாழக்கிழமை ஒருவா் உயிரிழந்தாா். இதையடுத்து, இந்த நோயால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 18-ஆக உயா்ந்துள்ளது.
கா்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், இந்நோய்க்கு ஏற்கெனவே 17 போ் உயிரிழந்துள்ளனா். கடந்த மாா்ச் 10ஆம் தேதியில் இருந்து கா்நாடகத்தில் கரோனா நோய்க்கு கலபுா்கி, சிக்பளாப்பூா், தும்கூரு, பாகல்கோட், கதக், விஜயபுரா, பெங்களூரு, தென்கன்னடம், பெலகாவி மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் உயிரிழந்தனா்.
இந்நிலையில், தென்மாவட்டம் மாவட்டத்தின் மங்களூரை சோ்ந்த 78 வயதான மூதாட்டி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரது மருமகள் உடனிருந்தாா். இந்த நிலையில் இருவருக்கும கரோனா உறுதியான நிலையில், 42 வயதான மருமகள் ஏப்.18ஆம் தேதி உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மாமியாா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 18 ஆக உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





