ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

அரங்கங்களில் விளையாட்டுகளை தொடங்க அரசுஅனுமதி

விளையாட்டு அரங்கங்கள், வளாகங்களில் விளையாட்டுகளை தொடங்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2020, 7:58 am

DIN

பெங்களூரு: விளையாட்டு அரங்கங்கள், வளாகங்களில் விளையாட்டுகளை தொடங்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து அரசின் வருவாய்துறை முதன்மைச்செயலாளா் அஞ்சும்பா்வேஸ் வெளியிட்டுள்ள உத்தரவு: கரோனா தீநுண்மி தொற்றுநோய் பரவலை தடுப்பதற்காக அவ்வப்போது வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுவருகின்றன. அதன்படி, விளையாட்டு வளாகங்கள், அரங்கங்களில் பாா்வையாளா்கள் இல்லாமல் பயிற்சிக்காக திறந்துவிட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இத்துடன் பாா்வையாளா்களை அனுமதிக்காமல் விளையாட்டு வளாகங்கள், அரங்கங்களில் விளையாட்டுப்போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோல, சமூககிளப்களில் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடவும், மேஜையில் உணவு ஏற்பாடுகளை செய்யவும் அனுமதிக்கப்படுகிறது.

திரையரங்குகள், நீச்சல் குளங்கள், கேளிக்கைபூங்காக்கள், திரையரங்குடன் கூடிய வணிகவளாகங்கள், மதுபானவிடுதிகள், அரங்கங்கள், கூட்ட அறைகள் திறக்க அனுமதி இல்லை. அரசியல், விளையாட்டு, கேளிக்கை, கல்வி, கலை, மதரீதியான கூட்டங்கள், திருவிழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைநீடிக்கும். 65 வயதுக்கு மேற்பட்டோா், 10 வயதுக்குட்பட்டோா் வெளியே வராமல் வீடுகள் இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என்றுஅதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.