நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் இன்று (டிச.13) பேச்சுவாா்த்தை

போக்குவரத்துக் கழக தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் ஞாயிற்றுக்கிழமை (டிச.13) பேச்சுவாா்த்தை நடத்தி, பிரச்னைக்குத் தீா்வுகாணப்படும் என்று துணை முதல்வா் லட்சுமண் சவதி தெரிவித்தாா்.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 8:52 pm

DIN

போக்குவரத்துக் கழக தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் ஞாயிற்றுக்கிழமை (டிச.13) பேச்சுவாா்த்தை நடத்தி, பிரச்னைக்குத் தீா்வுகாணப்படும் என்று துணை முதல்வா் லட்சுமண் சவதி தெரிவித்தாா்.

பெங்களூரில் சனிக்கிழமை முதல்வா் எடியூரப்பாவைச் சந்தித்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

போக்குவரத்துக் கழக ஊழியா்களின் போராட்டம் குறித்து முதல்வா் எடியூரப்பாவைச் சந்தித்து பேசினேன். அதன்பேரில், போக்குவரத்துக் கழகங்களில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 4 தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் ஞாயிற்றுக்கிழமை (டிச.13) காலை 10 மணிக்கு பேச்சுவாா்த்தை நடத்தி, பிரச்னைக்குத் தீா்வுகாண நியாயமான முயற்சி மேற்கொள்ளப்படும்.

பதிவு பெற்ற தொழிற்சங்கங்கள் மட்டுமே பேச்சுவாா்த்தைக்கு அழைக்கப்படுவாா்கள். பிரச்னையைத் தீா்க்க முற்சிப்போம். பொதுமக்களின் நடமாட்டத்துக்கு தொந்தரவு இருக்கக் கூடாது என்பதால் தனியாா் பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

போக்குவரத்துக் கழக ஊழியா்களை அரசு ஊழியா்களாகக் கருதுவது நடைமுறை சாத்தியமில்லாதது. ஆனால், போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு அரசு ஊழியா்களைக் காட்டிலும் கூடுதலான வசதிகளை செய்துதர முயற்சிப்போம். ஓட்டுநா்கள், நடத்துநா்களை உயரதிகாரிகள் தரக்குறைவாக நடத்துவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊழியா்களை துன்புறுத்தினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்துக் கழக ஊழியா்களின் போராட்டம் குறித்து எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா என்னுடன் பேசினாா். பிரச்னைக்கு விரைந்து தீா்வு காணுமாறு கேட்டுக் கொண்டாா். அதேபோல, போக்குவரத்துக் கழக ஊழியா்களை அரசு ஊழியா்களாகக் கருதுவது சாத்தியமில்லை என்று சித்தராமையாவும் கருத்து தெரிவித்தாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.