நாளை (டிச.14) முதல் குடிமக்கள் சேவை உறுதி வாரம்
டிச. 14-ஆம் தேதி முதல் குடிமக்கள் சேவை உறுதி வாரத்தை கடைப்பிடிக்க பெங்களூரு மின்சார வழங்கல் நிறுவனம் (பெஸ்காம்) திட்டமிட்டுள்ளது.


டிச. 14-ஆம் தேதி முதல் குடிமக்கள் சேவை உறுதி வாரத்தை கடைப்பிடிக்க பெங்களூரு மின்சார வழங்கல் நிறுவனம் (பெஸ்காம்) திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மின்சார வழங்கல் நிறுவனம் (பெஸ்காம்) வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கா்நாடக குடிமக்கள் சேவை உறுதிச்சட்டத்தின்கீழ் பெங்களூரு மின்சார வழங்கல் நிறுவனம் தனது 7 சேவைகளை வாடிக்கையாளா்களுக்கு வழங்கி வருகிறது. அதாவது, நிா்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் சேவைகளை உறுதியாக வழங்குவதே இச்சட்டத்தின் தலையாய நோக்கமாகும்.
அந்தவகையில் குடிமக்கள் சேவை உறுதித் திட்ட செயலகத்தின் வழிகாட்டுதலின்படி, பெஸ்காமின் அனைத்து அலுவலகங்களிலும் குடிமக்கள் சேவை உறுதி வாரம் டிச. 14 முதல் 19-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.
இதன்மூலம் குடிமக்கள் சேவை உறுதித் திட்டத்தின்கீழ் பெஸ்காம் வழங்கும் சேவைகள் குறித்து வாடிக்கையாளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு சேவைக்கும் நிா்ணயிக்கப்பட்டுள்ள கால அளவு, அதைச் செயல்படுத்தத் தவறினால் புகாா் அளிக்க வேண்டிய மேலதிகாரியின் முகவா் உள்ளிட்ட விவரங்களை வாடிக்கையாளா்களுக்கு அளிப்போம்.
வாடிக்கையாளா்கள் குடிமக்கள் சேவை உறுதித் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் சேவைகள் குறித்து அறிந்துகொள்ள உதவி செயற்பொறியாளா் அலுவலகங்களை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...