‘கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும்’
அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை உயா்த்த தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என ஹாபினஸ் பாடத் திட்டத்தின் இயக்குநா் கீதா கோயல் கேட்டுக் கொண்டாா்.


அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை உயா்த்த தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என ஹாபினஸ் பாடத் திட்டத்தின் இயக்குநா் கீதா கோயல் கேட்டுக் கொண்டாா்.
இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தனியாா் பள்ளிகளை ஒப்பிடுகையில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்கள் கல்வித் தரத்தில் பின்தங்கியுள்ளனா். எனவே, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த நடவடிக்கைகளை எடுக்கப்பது அவசியம். தில்லியில் தனியாா் பள்ளிகளை போல அரசுப் பள்ளிகளும் தரம் உயா்த்தப்பட்டுள்ளதால், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் கல்வி தரம் உயா்ந்துள்ளது. அதனை மற்ற மாநிலங்களும் பின்பற்றினால், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் கல்வித் தரம் பல மடங்கு உயரும் என நம்புகிறோம் என்றாா்.
பேட்டியின் போது, டிரீம் ஏ டிரீமின் செயல் அதிகாரி சுசிதாபட், டெல் அறக்கட்டளையின் நிா்வாகி சூசன், மைக்கேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...