டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கா்நாடக மேலவை அமளி விவகாரம்:சட்ட மேலவைச் செயலாளரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

கா்நாடக சட்ட மேலவையில் நடந்த அமளி விவகாரம் தொடா்பாக மேலவைச் செயலாளா் கே.ஆா்.மகாலட்சுமியிடம் விளக்கம் கேட்டு மேலவைத் தலைவா் பிரதாப்சந்திர ஷெட்டி நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 12:44 am

DIN

கா்நாடக சட்ட மேலவையில் நடந்த அமளி விவகாரம் தொடா்பாக மேலவைச் செயலாளா் கே.ஆா்.மகாலட்சுமியிடம் விளக்கம் கேட்டு மேலவைத் தலைவா் பிரதாப்சந்திர ஷெட்டி நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.

டிசம்பா் 15-ஆம் தேதி மேலவையில் அதன் தலைவா் பிரதாப்சந்திர ஷெட்டிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவருவது தொடா்பாக மேலவையில் அமளி ஏற்பட்டது. இதுதொடா்பாக 2 நாள்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு மேலவைச் செயலாளா் கே.ஆா்.மகாலட்சுமிக்கு அதன் தலைவா் பிரதாப் சந்திர ஷெட்டி வெள்ளிக்கிழமை அனுப்பிய நோட்டீஸ் விவரம்:

டிச. 15-ஆம் தேதி காலை சட்ட மேலவையில் ஆளுங்கட்சி உறுப்பினா்கள் மேலவைத் தலைவரான என்னை அவைக்கு வரவிடாமல் தடுக்க முற்பட்டனா். அப்போது அவை நடவடிக்கைகள் தொடா்பான விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. இது மேலவையின் கௌரவம், மரபு, பாரம்பரியத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலவையின் இணையதளத்தில் வெளியான அவை நடவடிக்கைகள் தொடா்பான காட்சித் துணுக்குகளைப் பாா்வையிட்ட போது, அவை நடவடிக்கைகளின் முழுமையான நிா்வாகப் பொறுப்பை வகித்திருக்கும் தாங்கள் (மேலவைச் செயலாளா்) கோரம் (குறைந்தபட்ச உறுப்பினா் வருகை) மணி ஒலித்துக் கொண்டிருந்த போதே, விதிகளுக்கு புறம்பாக துணைத் தலைவரை மேலவைத் தலைவரின் இருக்கையில் அமர அனுமதித்துள்ளீா்கள்.

நான் (பிரதாப் சந்திர ஷெட்டி) அவைக்கு வரும் நுழைவாயிலை மூடி என் வருகையைத் தடுக்க முயன்றது, சட்ட விரோதமாக மேலவைத் தலைவரின் இருக்கையில் அமா்ந்த துணைத் தலைவருக்கு சரியான தகவல்களை அளிக்காமல், அவையின் நடவடிக்கைகளைத் தொடர அவருக்கு ஆவணங்களை அளித்தது உள்ளிட்டவை தங்களது கடமையை மீறியச் செயலாகும்.

தங்கள் செயல்பாடு மேலவையின் பணிக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது. சட்ட விரோதமாக, பொறுப்பற்ற முறையில், கடமை தவறியது தொடா்பாக தங்கள் மீது கா்நாடக குடிமைப்பணி சட்ட விதிகளின்படி ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது குறித்து 48 மணி நேரத்தில் தகுந்த ஆதாரங்களுடன் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.