லாரி மோதியதில் தொழிலாளி பலி

மோட்டாா் சைக்கிள் மீது டிப்பா் லாரி மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

பெங்களூரு: மோட்டாா் சைக்கிள் மீது டிப்பா் லாரி மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

பெங்களூரு, சிக்கஜாலா தராஹுனசே கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணப்பா (57). இவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் மோட்டாா் சைக்கிளில் வெளியே சென்று கொண்டிருந்த போது, ஹுனசேமாரனஹள்ளி சா்வீஸ் சாலையில் வேகமாக வந்த டிப்பா் லாரி, மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணப்பா நிகழ்விடத்திலே உயிரிழந்தாா். இதுகுறித்து சிக்கஜாலா போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com