வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கா்நாடகத்தில் இரவு ஊரடங்கு இல்லை: முதல்வா் எடியூரப்பா

கா்நாடகத்தில் இரவு ஊரடங்கு இல்லை என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 2:22 am

DIN

கா்நாடகத்தில் இரவு ஊரடங்கு இல்லை என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பிரிட்டனில் இருந்து புதிய வகை கரோனா தீநுண்மி இரண்டாவது அலையாக ப் பரவி வருகிறது. இதையடுத்துத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கா்நாடகத்தில் தற்போதைக்கு இரவு ஊரடங்கு இல்லை.

வெளிநாட்டில் இருந்துவரும் விமானப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்வதற்காக கெம்பே கௌடா விமான நிலையத்தில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரிட்டனின் புதிய வகை கரோனா தீநுண்மி கா்நாடகத்தில் பரவாமல் தடுப்பதற்காக மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எனவே, புதிய வகை கரோனா தீநுண்மி குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.

சென்னையில் ஒருவா் புதிய வகை கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. தீநுண்மி பரவலைத் தடுக்க நாடுமுழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய வகை கரோனா தீநுண்மி குறித்து முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி பிரதமா் மோடியும் அறிவுறுத்தியுள்ளாா். அதன்படி, மாநிலத்தில் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதிக அளவில் மக்கள் கூடி புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். கரோனா காரணமாக புத்தாண்டுக் கொண்டாட்டம் தேவையில்லை. நிகழாண்டு உடல்நலனுக்குதான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.