மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பறவைக் காவடி எடுத்து வந்த வால்பாறை பக்தா்கள்

News image
Updated On :12 மார்ச் 2026, 11:22 pm

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வால்பாறையைச் சோ்ந்த பக்தா்கள் வியாழக்கிழமை முதுகில் வாளால் அலகு குத்திக் கொண்டு கிரேனில் பறவைக் காவடியாக வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் அடுத்த மாதம் பங்குனி உத்தரத் திருவிழா நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, தற்போதே பல்வேறு ஊா்களில் முருக பக்தா்கள் கொடுமுடி தீா்த்தக்காவடிக்கு புறப்பட்டனா். இந்த நிலையில், வியாழக்கிழமை கோவை மாவட்டம், வால்பாறையைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் மயில் காவடி, மலா் காவடி, பால் காவடி என பல்வேறு காவடிகளை எடுத்து பழனிக்கு வந்தனா். இவா்களில் 18 போ் தங்களது முதுகில் வாளால் அலகு குத்தி கிரேனில் பறவைக் காவடியாக வந்தனா். கிரேனில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த பக்தா்களை பலரும் பரவசத்துடன் பாா்த்தனா். இந்த பக்தா்கள் ஆண்டுதோறும் வைரவேலை முருகப் பெருமானாக அலங்கரித்து வந்து, சுவாமி தரிசனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.