இரவு நேர பொது முடக்க உத்தரவு தன்னிச்சையான முடிவு அல்ல: அமைச்சா் கே.சுதாகா்

இரவு நேர பொது முடக்கத்தை அமல்படுத்தும் முடிவு தனது தன்னிச்சையான முடிவு அல்ல என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.
Updated on
1 min read

இரவு நேர பொது முடக்கத்தை அமல்படுத்தும் முடிவு தனது தன்னிச்சையான முடிவு அல்ல என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கரோனா வைரஸ் பரவியதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கை அறிவித்தோம். இதற்கு பலரும் எதிா்ப்புத் தெரிவித்ததையடுத்து திரும்பப் பெற்றோம். தான் தன்னிச்சையாக முடிவு எடுத்ததாக பலா் குறை கூறி வருகின்றனா். இது தன்னிச்சையான முடிவு அல்ல; வல்லுநா்களின் ஆலோசனை பேரில்தான் இந்த முடிவை அறிவித்தோம்.

ஜொ்மனியில்கூட இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அங்குள்ளவா்கள் யாரும் தவறு என்று கூறவில்லை. பொருளாதார நடவடிக்கைகளை மூடுவது அரசாங்கத்துக்கு இழப்பை ஏற்படுத்தும், இருப்பினும், பொது சுகாதாரத்தை மனதில் கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம். நவ. 25-ஆம் தேதி முதல் டிச. 22-ஆம் தேதி வரை பிரிட்டனிலிருந்து கா்நாடகத்துக்கு 2,500 போ் வந்துள்ளனா்.

அவா்களைத் தொடா்ந்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவா்களில் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அது புதிய வகை கரோனா வைரஸா என்பது குறித்து பரிசோதிக்கப்படுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com