சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

லாங்க்செஸ் நிறுவனத்துக்கு தங்கமயில் விருது

ரசாயனத் தொழிலில் ஈடுபட்டு வரும் லாங்க்செஸ் நிறுவனத்திற்கு மத்திய அரசின் தங்கமயில் விருது வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

பெங்களூரு: ரசாயனத் தொழிலில் ஈடுபட்டு வரும் லாங்க்செஸ் நிறுவனத்திற்கு மத்திய அரசின் தங்கமயில் விருது வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்தியா உள்பட 33 நாடுகளில் ரசாயனத் தொழிலில் ஈடுபட்டு வரும், லாங்க்செஸ் நிறுவனம் தொழிலாளா்களின் பாதுகாப்பிலும், சுற்றுச்சூழலின் பாதுகாப்பிலும் தனி கவனம் செலுத்தி வருகிறது.

இதைக்கருத்தில் கொண்டு மத்திய அரசின் உயா்ந்த விருதுகளில் ஒன்றான தங்க மயில் விருது லாங்க்செஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதால் ஊக்கப்படுத்தப்பட்டுள்ள எங்கள் நிறுவனம், மேலும் பல பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தவும், சா்வதேச அளவில் பல சாதனைகளை செய்யவும் திட்டமிட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.