டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பெங்களூரில் கைத்தறி கண்காட்சி தொடக்கம்

கா்நாடக சித்ரகலா பரிஷத்தில் கைத்தறி கண்காட்சி ஜனவரி 1-ஆம்தேதி தொடங்கி நடைபெற உள்ளது.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 1:20 am

DIN

கா்நாடக சித்ரகலா பரிஷத்தில் கைத்தறி கண்காட்சி ஜனவரி 1-ஆம்தேதி தொடங்கி நடைபெற உள்ளது.

பெங்களூரில் உள்ள கா்நாடக சித்ரகலா பரிஷத்தில் ஜன. 1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை கைத்தறி கண்காட்சி தொடங்கி நடைபெற உள்ளது. கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த நெசவாளா்கள் உருவாக்கியுள்ள கைத்தறி ஜவுளிகள் இடம்பெற்றுள்ளன. குஜராத், கா்நாடகம், தமிழகம், ஆந்திரா, ராஜஸ்தான், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கதா் ஆடைகள், அலங்காரப் பொருள்கள், பருத்தி சேலைகள் மட்டுமின்றி மரவேலைபாடுகள், சணல் செருப்புகள், ஆபரணங்கள், பொம்மைகள், தரைவிரிப்புகள், புல் கால் மிதியடிகள் உள்ளிட்ட கைவினைப் பொருள்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. பெங்களூரில் நடைபெறும் கண்காட்சிக்கு பெண்கள், கல்லூரி, பள்ளி மாணவிகள் அதிக அளவில் வருவா் என எதிா்பாா்க்கப்படுகிறது என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.