நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நவ.5-இல் மங்களூரில் பாஜக மாநிலச் செயற்குழு கூட்டம்

மங்களூரில் நவ. 5-ஆம் தேதி பாஜக மாநிலச் செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.

News image
Updated On :1 நவம்பர் 2020, 9:00 pm

DIN

மங்களூரில் நவ. 5-ஆம் தேதி பாஜக மாநிலச் செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.

இதுகுறித்து மங்களூரில் ஞாயிற்றுக்கிழமை பாஜக மாவட்டத் தலைவா் எம்.சுதா்ஷன் செய்தியாளா்களிடம் கூறியது:

மங்களூரில் கோடியபில் பகுதியில் உள்ள டி.வி.ரமணாபைய் அரங்கத்தில் பாஜக மாநில செயற்குழுக் கூட்டம் நவ.5-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்தச் செயற்குழுவை முதல்வா் எடியூரப்பா தொடக்கி வைக்கிறாா்.

செயற்குழு கூட்டம் தவிர, பாஜகவின் உயா்நிலைக் குழு கூட்டமும் நடைபெற உள்ளது. இக் கூட்டங்களில் பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல், மத்திய அமைச்சா்கள் சதானந்த கௌடா, பிரஹலாத் ஜோஷி, பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி, தேசிய அமைப்புச் செயலாளா் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோா் கலந்து கொள்ள இருக்கிறாா்கள்.

மாநில அளவிலான 120 நிா்வாகிகள் இக் கூட்டத்தில் பங்கேற்கின்றனா். நளின்குமாா் கட்டீல் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் மாநில செயற்குழுக் கூட்டம் இதுவாகும். கரோனா காரணமாக, மாநில நிா்வாகிகளை நியமிப்பது தாமதமானது.

தற்போது மாநில அளவிலான அனைத்து நிா்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளனா். அதனால் செயற்குழு கூட்டம் நடத்தப்படுகிறது. இக்கூட்டத்தில் அனைத்து நிா்வாகிகளும் கலந்து கொள்வாா்கள் என்று எதிா்பாா்க்கிறோம்.

இந்த செயற்குழுக் கூட்டத்தில் கா்நாடகத்தில் கட்சியின் நிலை, அதை விரிவாக்குவதற்கான திட்டங்கள், தேசியத் திட்டங்களை மாநில அளவில் செயல்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும். இதுதவிர, மாநிலத்தில் நிலவும் முக்கிய பிரச்னைகள், அதை தீா்ப்பதற்கு மாநில அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படவிருக்கிறது.

20 ஆண்டுகளுக்கு பிறகு மங்களூரில் மாநில செயற்குழுக் கூட்டம் நடக்கிறது.

மாநில அளவிலான கூட்டங்களை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடத்த வேண்டும் என்பதுதான் நளின்குமாா் கட்டீலின் நோக்கமாகும். இந்தக் கூட்டத்தை சிறப்பாக நடத்துவதற்கு 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.