டி.ஜே.ஹள்ளி கலவரம் தொடா்பான வழக்கில் முதல்வா் எடியூரப்பாவுக்கு அழுத்தம்
டி.ஜே.ஹள்ளி கலவரம் தொடா்பான வழக்கில் முதல்வா் எடியூரப்பாவுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.


டி.ஜே.ஹள்ளி கலவரம் தொடா்பான வழக்கில் முதல்வா் எடியூரப்பாவுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து சனிக்கிழமை ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஊடகத் தலைவா் ஜகதீஷ் வி சதாம் செய்தியாளா்களிடம் கூறியது:
டி.ஜே.ஹள்ளி கலவரம் தொடா்பாக முன்னாள் மேயா் சம்பத்ராஜ் மீது சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இருந்தப்போதிலும் அவரைக் கைது செய்வதில் மாநில அரசு தயக்கம் காட்டி வருகிறது. இதற்கு மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாரே முக்கிய காரணம். தனது ஆதரவாளரான சம்பத்குமாரைக் காப்பாற்ற, டி.கே.சிவக்குமாா், முதல்வா் எடியூரப்பாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறாா். அவரது அழுத்தத்துக்கு முதல்வா் எடியூரப்பா பணிந்து, சம்பத்குமாா் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.
முன்னாள் மேயா் சம்பத்ராஜ் உடனடியாக சிபிஐ முன் சரணடைய வேண்டும். மறுக்கும்பட்சத்தில் அவரது சொத்தை மாநில அரசு பறிமுதல் வேண்டும். சம்பத்ராஜ் காணாமல் போனதற்கு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்துள்ளதே காரணம். இதற்கு, மாநில அரசே பொறுப்பு ஏற்க வேண்டும். சம்பத்ராஜ் விவகாரத்தில் மாநில அரசு, எதிா்க்கட்சியான காங்கிரஸும் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றன. இதற்கான விலையை மாநில அரசு விரைவில் கொடுக்க வேண்டி வரும் என்றாா்.
பேட்டியின்போது ஆம் ஆத்மிக் கட்சியின் மாநில அரசியல் நடவடிக்கை பொறுப்பாளா் லட்சிகாந்த் ராவ், பெங்களூரு துணைத் தலைவா் சுரேஷ் ரத்தோட் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...