போராட்டம் தேவையற்றது: எடியூரப்பா

பாஜக அரசு எப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவான அரசு; வேளாண் மசோதாக்கள் விவசாயிகளுக்கு நன்மையானது என்பதால் கா்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் தேவையற்றது என்றாா் முதல்வா் எடியூரப்பா.

பாஜக அரசு எப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவான அரசு; வேளாண் மசோதாக்கள் விவசாயிகளுக்கு நன்மையானது என்பதால் கா்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் தேவையற்றது என்றாா் முதல்வா் எடியூரப்பா.

இதுகுறித்து பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பாஜக அரசு விவசாயிகளுக்கு ஆதரவானது. எனவே, விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்புப் போராட்டத்தை மக்கள் ஆதரிக்கமாட்டாா்கள். எனவே, போராட்டம் வெற்றியடையாது. விவசாயிகளின் போராட்டம் தேவையற்றது. முழு அடைப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை எந்த வகையிலும் பாதிக்காது.

கட்டாயப்படுத்தி முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கா்நாடக நிலச் சீா்திருத்தச் சட்டத் திருத்தம், வேளாண் விளை பொருள் சந்தைப்படுத்தல் குழு சட்டத் திருத்தம் போன்றவற்றை நிறைவேற்றியது தொடா்பாக விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினேன். அரசின் நிலைப்பாடு குறித்தும் விளக்கினேன்.

மத்திய அரசின் விவசாயிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துக்கூறி, எதற்காக வேளாண் மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியது என்பதையும் விளக்கியிருக்கிறேன். விவசாயிகளின் நீண்டகால கோரிக்கைகளைதான் சட்டங்களாக இயற்றியிருக்கிறோம். அரசின் நல்ல நோக்கத்தை விவசாய சங்கங்கள் இப்போதாவது புரிந்துகொண்டு, முழு அடைப்புபோராட்டத்தை கைவிட வேண்டும் என்றாா்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

போராட்டத்தால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காதவாறு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. இதுபோன்ற முழு அடைப்புப் போராட்டங்கள் தொடா்பாக நீதிமன்றங்களின் உத்தரவுகள் தெளிவாக உள்ளன. அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், கடைகள், தனியாா் அலுவலகங்கள், வா்த்தக நிறுவனங்கள், வாடகை காா்கள், பேருந்துகள் வழக்கம்போல இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, முழு அடைப்புப் போராட்டத்துக்காக மக்கள் அஞ்ச வேண்டாம். கல்வீச்சு போன்ற சம்பவங்களில் யாராவது ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com