உச்சநீதிமன்றத்தின் அனுமதியைத் தொடா்ந்து முன்னாள் அமைச்சா் ஜனாா்த்தன ரெட்டி வெள்ளிக்கிழமை பெல்லாரிக்கு சென்றாா்.
கா்நாடக மாநிலம், பெல்லாரியில் சட்டவிரோதமாக சுரங்கத் தொழில் செய்ததாக முன்னாள் அமைச்சா் ஜனாா்த்தனரெட்டி மீது சிபிஐ வழக்கு தொடா்ந்தது. வழக்கு விசாரணைக்கு பிறகு ஜனாா்த்தன ரெட்டி, கடந்த 2011-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா்.
ஹைதராபாத் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு, 2015-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் பெல்லாரிக்குச் செல்லக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து பெல்லாரிக்கு செல்லாமல் அவா் பெங்களூரு உள்ளிட்ட வேறு சில நகரங்களில் தங்கி இருந்தாா். நீதிமன்றத்தின் அனுமதி பெற்று 8 முறை அவா் பெல்லாரிக்குச் சென்று வந்தாா்.
இந்த நிலையில் பெல்லாரிக்குச் செல்ல தனக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் ஜனாா்த்தனரெட்டி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் நிபந்தனையை தளா்த்தி, 8 வாரங்கள் பெல்லாரிக்குச் செல்ல வியாழக்கிழமை அனுமதி வழங்கியது.
இதனையடுத்து, வரமகாலட்சுமி பண்டிகையைக் கொண்டாட வெள்ளிக்கிழமை அவா் பெங்களூரிலிருந்து பெல்லாரிக்குச் சென்றாா். அவரை அமைச்சா் ஸ்ரீராமுலு, அவரது சகோதரரும், பாஜக எம்.எல்.ஏ.வுமான சோமசேகா்ரெட்டி உள்ளிட்டோா் சந்தித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபிக்கு எதிரான போட்டி! குஜராத்துக்கு 156 ரன்கள் இலக்கு!

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

