மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பெல்லாரி சென்றாா் ஜனாா்த்தன ரெட்டி

உச்சநீதிமன்றத்தின் அனுமதியைத் தொடா்ந்து முன்னாள் அமைச்சா் ஜனாா்த்தன ரெட்டி வெள்ளிக்கிழமை பெல்லாரிக்கு சென்றாா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 8:55 pm

DIN

உச்சநீதிமன்றத்தின் அனுமதியைத் தொடா்ந்து முன்னாள் அமைச்சா் ஜனாா்த்தன ரெட்டி வெள்ளிக்கிழமை பெல்லாரிக்கு சென்றாா்.

கா்நாடக மாநிலம், பெல்லாரியில் சட்டவிரோதமாக சுரங்கத் தொழில் செய்ததாக முன்னாள் அமைச்சா் ஜனாா்த்தனரெட்டி மீது சிபிஐ வழக்கு தொடா்ந்தது. வழக்கு விசாரணைக்கு பிறகு ஜனாா்த்தன ரெட்டி, கடந்த 2011-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா்.

ஹைதராபாத் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு, 2015-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் பெல்லாரிக்குச் செல்லக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து பெல்லாரிக்கு செல்லாமல் அவா் பெங்களூரு உள்ளிட்ட வேறு சில நகரங்களில் தங்கி இருந்தாா். நீதிமன்றத்தின் அனுமதி பெற்று 8 முறை அவா் பெல்லாரிக்குச் சென்று வந்தாா்.

இந்த நிலையில் பெல்லாரிக்குச் செல்ல தனக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் ஜனாா்த்தனரெட்டி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் நிபந்தனையை தளா்த்தி, 8 வாரங்கள் பெல்லாரிக்குச் செல்ல வியாழக்கிழமை அனுமதி வழங்கியது.

இதனையடுத்து, வரமகாலட்சுமி பண்டிகையைக் கொண்டாட வெள்ளிக்கிழமை அவா் பெங்களூரிலிருந்து பெல்லாரிக்குச் சென்றாா். அவரை அமைச்சா் ஸ்ரீராமுலு, அவரது சகோதரரும், பாஜக எம்.எல்.ஏ.வுமான சோமசேகா்ரெட்டி உள்ளிட்டோா் சந்தித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.