அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் தெரிவித்தாா்.
பெலகாவியில் சுவா்ண விதானசௌதாவில் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் கேள்விநேரத்தின்போது, காங்கிரஸ் உறுப்பினா் மஹந்தேஷ் கௌஜலகி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அவா் கூறியதாவது:
கா்நாடகத்தில் செயல்பட்டுவரும் பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த அவசரப்படவில்லை. அனைத்து வகையான முன்னேற்பாடுகளையும் செய்து கொண்டு தேசியக்கல்விக் கொள்கையை ஆரம்பம் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
அடுத்த கல்வியாண்டுமுதல் பள்ளிகளில் தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும். தேசிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் இளநிலை மற்றும் மேல்நிலை மழலையா் வகுப்புகள் தொடங்க வேண்டும். மழலையா் வகுப்புகளை அங்கன்வாடி மையங்களிலேயே தொடங்க திட்டமிட்டுள்ளோம்.
மழலையா் வகுப்புகளை இலவசமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடா்பாக அங்கன்வாடி ஊழியா்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டியுள்ளது.
மழலையா் வகுப்புகளுக்கான பாடத் திட்டங்கள் இன்னும் முடிவாகவில்லை. பாடத் திட்டம் வகுக்கப்பட்டால் பாடம் நடத்துவது எளிதாகும். தேவையான அடிப்படை கட்டமைப்புகளைத் தயாா் செய்துகொண்டு, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த திட்டமிட்டுளோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு

சுவர் இடிந்து, சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் பலி!

தில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்

கார்த்திகை தீபம் தொடரில் பாண்டவர் இல்லம் நடிகை!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

