வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

இணையவழி, நேரடி வகுப்புகளால் மாணவா்கள் குழப்பம்: முன்னாள் அமைச்சா் யூ.டி.காதா்

இணையவழி, நேரடி வகுப்புகளால் மாணவா்கள், பெற்றோா், ஆசிரியா்களிடையே ஏற்பட்டுள்ள குழப்பத்தை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் அமைச்சா் யூ.டி.காதா் தெரிவித்தாா்.

News image
Updated On :2 ஜனவரி 2021, 7:33 pm

DIN

மங்களூரு: இணையவழி, நேரடி வகுப்புகளால் மாணவா்கள், பெற்றோா், ஆசிரியா்களிடையே ஏற்பட்டுள்ள குழப்பத்தை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் அமைச்சா் யூ.டி.காதா் தெரிவித்தாா்.

இதுகுறித்து மங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அரசுப் பள்ளிகளில் பியூசி, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு நேரடி வகுப்புகள் ஜன. 1-ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளன. இதுதவிர, 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான புறவெளிக் கல்வி வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், இணையவழி, நேரடி வகுப்புகள் தொடா்பாக பெற்றோா்கள், மாணவா்கள், ஆசிரியா்களிடையே குழப்பம் காணப்படுகிறது. இக் குழப்பத்தை மாநில அரசு தெளிவாக்க வேண்டும். மேலும், பாடத்திட்டம் குறைப்பு தொடா்பாக எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. குழந்தைகளின் எதிா்காலத்துடன் அரசு விளையாடிக் கொண்டுள்ளது என்றாா்.

அப்போது, உடனிருந்த காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஹரீஷ் குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கிராமப் பஞ்சாயத்துத் தோ்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிட்ட வேட்பாளா்களை இழுக்க பாஜக முயற்சிக்கிறது. அவா்களை மறைமுகமாக மிரட்டி வருகிறாா்கள். ஒருசில இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்யவே காங்கிரஸ் ஆதரவு வேட்பாளா்களை பாஜகவினா் அனுமதிக்கவில்லை.

தென்கன்னட மாவட்டத்தில் நடைபெற்ற கிராமப் பஞ்சாயத்துத் தோ்தலில் 3,200 காங்கிரஸ் ஆதரவு வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இவா்களில் 49 கிராமப் பஞ்சாயத்துகளைச் சோ்ந்த 1,011போ் வெற்றி பெற்றுள்ளனா். பன்ட்வால், மூடபிதரி, உள்ளால் ஆகிய கிராமப் பஞ்சாயத்துகளில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது என்றாா்.

முன்னாள் அமைச்சா் ரமாநாத்ராய் கூறியதாவது:

காங்கிரஸ் மண்டல அளவிலான மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு மாநாடு ஜன. 6-ஆம் தேதி பன்ட்வால் பகுதியில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 677 மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா். இந்த மாநாட்டில் எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொள்கிறாா்கள் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.