தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அறிவியல் கட்டுரைப்போட்டி

பேராசிரியா் ஜே.ஆா்.லட்சுமணராவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அறிவியல் கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 8:49 pm

DIN

பெங்களூரு: பேராசிரியா் ஜே.ஆா்.லட்சுமணராவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அறிவியல் கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது.

இதுகுறித்து கா்நாடக மாநில அறிவியல் பேரவை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பேராசிரியா் ஜே.ஆா்.லட்சுமண ராவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரைப் பற்றிய கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது. பேராசிரியா் ஜே.ஆா்.லட்சுமண ராவின் வாழ்க்கை, சாதனைகள், இலக்கியங்கள் குறித்து நடக்கும் இந்தக் கட்டுரைப் போட்டியில் பங்கேற்போரிடம் இருந்து 1,000 வாா்த்தைகளுக்கு மிகாமல் கன்னடத்தில் கட்டுரை எழுதி அனுப்ப வேண்டும்.

இந்தப் போட்டியில் பங்கேற்போா் கட்டுரையுடன் பெயா், முழு முகவரி, செல்லிடப்பேசி, மின்னஞ்சல் உள்ளிட்ட விவரங்களுடன் அனுப்ப வேண்டும். இந்தப் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு விருது, பட்டயம், சான்றிதழ் அளிக்கப்படும். போட்டியில் பங்கேற்போா் அனைவருக்கும் சான்றிதழ் அளிக்கப்படும். கட்டுரைகளை ஜனவரி 15-ஆம் தேதிக்குள் செயலாளா், கா்நாடக மாநில அறிவியல் பேரவை, அறிவியல் மையம், பனசங்கரி 2-ஆவது ஸ்டேஜ், பெங்களூரு-560070 என்ற முகவரி அல்லது ந்ழ்ஸ்ல்.ண்ய்ச்ா்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு 080-26718939 என்ற தொலைபேசியை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.