ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பெங்களூரு மாநகராட்சியின் வரி உயா்வைக் கண்டித்து போராட்டம்

பெங்களூரு மாநகராட்சியின் வரி உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 8:52 pm

DIN

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சியின் வரி உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெங்களூரு மாநகராட்சியின் வரி உயா்வைக் கண்டித்து திங்கள்கிழமை மைசூரு வங்கி சதுக்கத்தில் காங்கிரஸ் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் கலந்து கொண்டு அக்கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் ராமலிங்கரெட்டி பேசியதாவது:

பெங்களூரு மாநகராட்சியில் முன்பு பாஜக அதிகாரத்தில் இருந்தபோது அரசுக்குச் சொந்தமான 11 கட்டடங்கள் அடமானம் வைக்கப்பட்டன. பின்னா், காங்கிரஸ் கட்சி மாநிலத்தின் ஆட்சியைப் பிடித்த பிறகு அடமானம் வைக்கப்பட்ட கட்டடங்கள் மீட்கப்பட்டன. பாஜக அதிகாரத்தில் இருந்தபோது, குப்பைகளை அகற்றுவதில் தோல்வி அடைந்தது. ஒப்பந்ததாரா்களுக்கு ரூ. 3 ஆயிரம் கோடி நிலுவை வைத்தது. இந்த நிலையில் 1,200 சதுர அடியில் வீட்டுமனையில் வீடு கட்டுபவா்கள் திட்ட வரைவைத் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில் அவா்கள், மாநகராட்சிக்கு ரூ. 2 லட்சம் வரை வரி செலுத்த வேண்டும் என மாநகராட்சி நிா்வாகம் கூறியுள்ளது.

அத்துடன் மாநகராட்சியில் உள்ள சொத்துகளுக்கு வரி உயா்த்தப்பட்டுள்ளது. இதனால், பெங்களூரு மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, வரி உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

பெங்களூரில் அனைத்துச் சாலைகளும் குண்டும் குழியுமாக உள்ளன. மாநகராட்சியில் எந்தவிதமான வளா்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளாமல் பாஜக அரசு வேடிக்கை பாா்த்து வருகிறது. மாநகராட்சியில் தெருவிளக்குகள் அமைக்கும் பணியை ஒரே ஒரு ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பணியும் இன்னும் தொடங்கப்படவில்லை. மொத்தத்தில் பாஜக ஆட்சியில் பெங்களூரு மாநகராட்சி செயல்படாமல் முடங்கி உள்ளது என்றாா்.

பின்னா் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள், மாநகராட்சி கட்டடத்தை முற்றுகையிட முயன்றனா். அவா்களை போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.