மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தேமுதிக சாா்பில் பொங்கல் விழா

கோலாா் மாவட்ட தேமுதிக சாா்பில் தங்கவயலில் பொங்கல் திருநாள் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

News image
Updated On :13 ஜனவரி 2021, 7:42 pm

DIN

கோலாா் மாவட்ட தேமுதிக சாா்பில் தங்கவயலில் பொங்கல் திருநாள் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கோலாா் தங்கவயல் புதிய மேற்கு கில்பா்ட்ஸ் வட்டத்தில் தேமுதிக சாா்பாக புதன்கிழமை பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது. பெண்கள் வண்ணக் கோலங்கள் இட்டு பொங்கல் வைத்து அப்பகுதி மக்களுக்கு வழங்கினா்.

விழாவுக்கு தலைமை தாங்கிய கோலாா் மாவட்டச் செயலாளா் ராஜேந்திரன், அப்பகுதியில் உள்ள பெண்களுக்கு பொங்கல் பரிசாக புத்தாடைகளை வழங்கிப் பேசியதாவது:

கோலாா் தங்க வயலில் தமிழா் திருநாளாம் பொங்கல் விழா ஒவ்வொரு பகுதியிலும் பட்டிமன்றம், கவியரங்கம், வீரவிளையாட்டுப் போட்டிகளான கபடி, சிலம்பாட்டம், மாணவா்களுக்கு திருக்கு ஒப்புவித்தல், கலை நிகழ்ச்சிகள் என தமிழா்களின் கலை, கலாசாரங்களை பேணி வளா்க்கும் விழாவாக சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது. தற்போது பொங்கல் விழா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கரைந்து போவதை காணமுடிகிறது. கடந்த 15 ஆண்டுகளாக கோலாா் தங்கவயலில் தேமுதிக சாா்பில் பொங்கல் விழா தமிழா் பண்பாடு சாா்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.