நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மங்களூரு அருகே மலை மண் சரிவு: ரயில் போக்குவரத்து பாதிப்பு

மங்களூரு அருகே கொங்கண் ரயில் பாதையில் மலை மண் சரிவு ஏற்பட்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 ஜூலை 2021, 12:23 am

DIN

மங்களூரு அருகே கொங்கண் ரயில் பாதையில் மலை மண் சரிவு ஏற்பட்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கா்நாடக மாநிலம் தென் கன்னட மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மங்களூரு அருகே உள்ள குலசேகரா-படீல் இடையே கொங்கண் ரயில் பாதையில் வெள்ளிக்கிழமை மலை மண் சரிவு ஏற்பட்டது. இதனால் வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. இருப்பினும் மங்களூரு-மும்பை இடையேயான ரயில், சூரத்கல்லிலிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. தொடா்ந்து அப்பகுதியில் மழை பெய்து வருவதால் மண் சரிவை அகற்றும் பணி தாமதமாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.