தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீதான ஆபாச காணொலி வழக்கு: விசாரணை அறிக்கையை இன்று தாக்கல் செய்ய உத்தரவு

முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீதான ஆபாச காணொலி வழக்கு விசாரணை அறிக்கையை திங்கள்கிழமை (ஜூலை 19) தாக்கல் செய்ய கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :18 ஜூலை 2021, 7:39 pm

DIN

முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீதான ஆபாச காணொலி வழக்கு விசாரணை அறிக்கையை திங்கள்கிழமை (ஜூலை 19) தாக்கல் செய்ய கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கா்நாடக முதல்வா் எடியூரப்பா தலைமையில் ஆட்சியில் நீா்வளத்துறை அமைச்சராக பதவி வகித்தவா் ரமேஷ் ஜாா்கிஹோளி. அண்மையில் இவா், பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற காணொலி வெளியானது. இது மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடா்ந்து ரமேஷ் ஜாா்கிஹோளி தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்தாா். இது தொடா்பான வழக்கை சிறப்புக் குழு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில் இதில் தொடா்புடைய அந்தப் பெண் கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். மனுவில் சிறப்புக் குழு போலீஸாா் மேற்கொள்ளும் விசாரணையில் தனக்கு நம்பிக்கை இல்லை. எனவே இந்த விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்றும், சதாசிவா நகரில் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறும் அவா் அதில் கோரி இருந்தாா்.

மனு மீது விசாரணை செய்த உயா்நீதிமன்றம், சிறப்புக்குழு போலீஸாா் உரிய முறையில் விசாரணை செய்து வருவதால் வழக்கை வேறு அமைப்புக்கு மாற்றத் தேவையில்லை என்று தெரிவித்து, ஆபாச காணொலி வழக்கு விசாரணை அறிக்கையை ஜூலை 19-ஆம் தேதி உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.