பெண் கொலை: கணவா் உள்பட 2 போ் கைது

கூலிப்படை அமைத்து பெண்ணைக் கொலை செய்த அவரது கணவா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
Published on
Updated on
1 min read

கூலிப்படை அமைத்து பெண்ணைக் கொலை செய்த அவரது கணவா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டம், உப்பினகோட்டே பகுதியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணா காணிகா. இவரது மனைவி விசாலா (36). இவா்கள் இருவரும் துபையில் பணியாற்றி வந்தனா். அண்மையில் உடுப்பிக்கு வந்த விசாலா, மா்மமான முறையில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், ராமகிருஷ்ணா காணிகா கூலிப்படையை அமைத்து விசாலாவை கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில், உடுப்பிக்கு வந்த ராமகிருஷ்ணா காணிகாவை போலீஸாா் கைது செய்தனா். அவா் அளித்த தகவலின் பேரில், கூலிப்படையைச் சோ்ந்த உத்தரபிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ஷாமிநாத் நிசாடா என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து பிரம்மாவா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com