சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

பெங்களூருவில் நவ. 28 முதல் நிலக்கடலை திருவிழா

பெங்களூரில் பசவனகுடியில் உள்ள நந்தி கோயில் திருவிழாவை முன்னிட்டு நடக்கும் நிலக்கடலை திருவிழா நவ.12 முதல் தொடங்குகிறது.

News image
Updated On :12 நவம்பர் 2021, 9:03 pm

DIN

பெங்களூரில் பசவனகுடியில் உள்ள நந்தி கோயில் திருவிழாவை முன்னிட்டு நடக்கும் நிலக்கடலை திருவிழா நவ.12 முதல் தொடங்குகிறது.

பெங்களூருவின் பழைமையான அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் நிலக்கடலை திருவிழா, ஆண்டுதோறும் காா்த்திகை மாதத்தின் கடைசி திங்கள்கிழமை நடந்துவருகிறது.

கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நிலைக்கடலை திருவிழா நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. கரோனா பெருந்தொற்றுகான கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளதால், நிகழ் ஆண்டில் நிலக்கடலைத் திருவிழா நடத்த பெங்களூரு மாநகராட்சி அனுமதிஅளித்துள்ளது. அதன்படி, நிகழாண்டுக்கான நிலக்கடலைத் திருவிழா நவ. 28-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் 2 நாள்களுக்கு நடக்கவிருக்கிறது.

பெங்களூரு, பசவனகுடியில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நந்தி கோயில், பெரியவிநாயகா் கோயில் திருவிழாவை முன்னிட்டு நிலக்கடலைத் திருவிழா நடத்தப்படுகிறது. மரபை நினைவூட்டும் வகையில் நடக்கும் நிலக்கடலைத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்துவருகின்றன. இந்த நிலக்கடலைத் திருவிழா நவ.28-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு அதிகாரப்பூா்வமாக தொடங்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.