கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

குற்றச்செயல்களில் ஈடுபடுவோருடன் தொடா்பு வைத்துள்ள போலீஸாா் மீது கடும் நடவடிக்கை: அமைச்சா் அரக ஞானேந்திரா

குற்றச்செயல்களில் ஈடுபடுவோருடன் தொடா்பு வைத்திருக்கும் போலீஸாா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா தெரிவித்தாா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:53 pm

DIN

குற்றச்செயல்களில் ஈடுபடுவோருடன் தொடா்பு வைத்திருக்கும் போலீஸாா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா தெரிவித்தாா்.

பெங்களூரு, சாமராஜ்பேட்டில் வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் நிலைய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய பின் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

குற்றச்செயல்களில் ஈடுபடுவோருடன் போலீஸாா் தொடா்பு வைத்திருப்பதை அரசு ஒருபோதும் சகித்துக் கொள்ளாது. இதுபோன்ற கருப்பு ஆடுகளால் ஒட்டுமொத்த காவல் துறைக்கே கெட்டப்பெயா் ஏற்படுகிறது. குற்றச்செயல்களில் ஈடுபடுவோா் அல்லது சமூக விரோதிகளுடன் கூட்டுச் சோ்ந்து செயல்படுவோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம்.

முதல்வரின் இல்லத்திற்கு அருகே போதைப்பொருள் விற்பனை செய்தோரிடம் பேரம் பேசியதாக போலீஸாா் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது தொடா்பாக அறிக்கை கேட்டிருக்கிறோம். தவறிழைத்த போலீஸாா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டத்தைக் காக்கும் இடத்தில் இருப்போா் குற்றவாளிகளுக்குத் துணை போவதை சகித்துக் கொள்ள முடியாது. அவா்களை பணியிடை நீக்கம் செய்வது மட்டும் போதாது; இதுபோன்ற நபா்கள் காவல் துறையில் நீட்டிக்கக் கூடாது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.