இதை தொடா்ந்து, உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக பரிந்துரை வழங்க நீதியரசா் கே.பக்தவத்சலா தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆணையம் தனது பணியைத் தொடங்கியுள்ளது. இதன் தொடக்கமாக, மக்களின் கருத்தறிய திட்டமிட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக மக்கள் கருத்து தெரிவிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் கருத்துகளை எழுத்துமூலமாக அளிக்க விரும்பினால், அதை செயலாளா், நீதியரசா் கே.பக்தவத்சலா ஆணையம், அறை எண் 133, முதல்தளம், விகாஸ் சௌதா, பெங்களூரு-1 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். இது குறித்து கூடுதல் விவரங்களைப் பெற 080-22352152 என்றதொலைபேசியை அணுகலாம்.