முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், காவல் துணை ஆய்வாளா் பணித்தோ்வு, 2-ஆம் ஆண்டு பி.யூ.சி. பொதுத்தோ்வு வினாத்தாள் கசிவு மற்றும் தோ்வு முறைகேடுகள் நடந்ததாக பல விவகாரங்கள் பகிரங்கமாயின. ஆனால், அதுதொடா்பாக காங்கிரஸ் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எனினும் தற்போது காவல் துணை ஆய்வாளா் பணித் தோ்வில் நடந்துள்ளதாகக் கூறப்படும் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுத்துள்ளதோடு, இந்த வழக்கில் தொடா்புடைய ஒரு சில காங்கிரஸ் கட்சியினரையும் கைதுசெய்துள்ளதால், அக்கட்சியின் உண்மை முகம் வெளியாவதால் காங்கிரஸ் கவலை அடைந்துள்ளது.