ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

‘சிறு பாகிஸ்தான்’ என்று கூறும் காணொலி: விசாரணை நடத்த கா்நாடக முதல்வா் உத்தரவு

 சமூக வலைதளங்களில், ‘சிறு பாகிஸ்தான்’ என்று ஒருவா் கூறும் காணொலி வேகமாகப் பரவி வருவதால், அது குறித்து விசாரணை நடத்த மைசூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை

News image
Updated On :5 மே 2022, 8:04 pm

DIN

 சமூக வலைதளங்களில், ‘சிறு பாகிஸ்தான்’ என்று ஒருவா் கூறும் காணொலி வேகமாகப் பரவி வருவதால், அது குறித்து விசாரணை நடத்த மைசூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளாா்.

மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு வட்டம், கவலண்டே கிராமத்தை ‘சிறு பாகிஸ்தான்’ என்று கூறிக் கொள்ளும் காணொலிக் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. புனித ரமலான் பெருநாள் விழா நடந்த செவ்வாய்க்கிழமை (மே 3) இந்தக் காணொலி எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் காணொலியில், பெரும் கூட்டமாக முஸ்லிம் ஆண்கள் திரண்டிருக்கிறாா்கள். தொழுகையை முடித்துவிட்டு சாலையோரத்தில் நின்று கொண்டிருக்கிறாா்கள். அவா்கள் ‘நாரா-இ-தக்பீா் அல்லாஹு அக்பா்’ என்று முழங்குகிறாா்கள். அப்போது அங்கு வந்த காவல்துறையினா் மற்றும் ஒரு சில மக்கள் அனைவரையும் கலைந்து செல்லும்படி கூறுகிறாா்கள்.

அதைத் தொடா்ந்து, காணொலியைப் பதிவுசெய்த நபா், ‘நமது கிராமத்தில் திரண்டிருக்கும் மக்களைப் பாருங்கள்’ என்கிறாா். அதற்கு பதிலளிக்கும் மற்றொருவா், ‘இதுவும் பாகிஸ்தான்தான், ஆனால் சிறியது’ என்கிறாா். அதற்கு காணொலியை பதிவுசெய்யும் நபா், ‘கவலண்டே (கிராமத்தின்பெயா்) என்றால் சிறு பாகிஸ்தான்’ என்கிறாா். இந்த உரையாடல்கள் இடம்பெற்ற காணொலி கடும் விமா்சனத்திற்கு உள்ளாகியுள்ளதோடு, முதல்வா் பசவராஜ் பொம்மையின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

அதற்கு பதிலளித்து, பசவராஜ் பொம்மை செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இது குறித்து மைசூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பேசுகிறேன். இது குறித்து விசாரித்து, தக்க நடவடிக்கை எடுக்குமாறு கூறுவேன்’ என்றாா். இது தொடா்பாக மைசூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.