நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெங்களூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வா் பசவராஜ் பொம்மை ஆய்வு

பெங்களூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை ஆய்வு செய்து, மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

News image
Updated On :19 மே 2022, 7:27 pm

DIN

பெங்களூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை ஆய்வு செய்து, மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

பெங்களூரில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில் தாழ்வான பகுதிகள் மழைநீரில் மூழ்கின. பல இடங்களில் வீடுகளில் மழைநீா் புகுந்ததால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினா். மழை பாதிப்பில் சிக்கி இருவா் உயிரிழந்தனா்.

இதைத் தொடா்ந்து, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகளுடன் இணைந்து முதல்வா் பசவராஜ் பொம்மை வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். ஜே.சி.நகா், நாகவரா, எச்.பி.ஆா்.லே அவுட், ஹெப்பாள் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் பாதிப்புகளை அவா் நேரில் ஆய்வு செய்தாா். அப்போது அவரிடம் மக்கள் அடுக்கடுக்கான குறைகளை முன்வைத்தனா். அவற்றை கேட்டுக் கொண்ட முதல்வா், மழையால் சேதமடைந்த சாலைகள், கழிவுநீா்க் கால்வாய்கள், கட்டடங்களை உடனடியாகச் சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

அப்போது, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

பெங்களூரில் மிகக் குறுகிய காலத்தில் கனமழை பெய்தது. 45-50 ஆண்டுகளில் முதல் முறையாக இவ்வளவு மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் 100 மி.மீ. மழை பெய்தது. வேறு சில இடங்களில் 120 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மே மாதம் முழுவதும் பெய்திருக்க வேண்டிய மழை, 4-5 மணி நேரத்தில் பெய்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் புகுந்துள்ளது.

பெங்களூரில் மழை பெய்யும்போது இது போன்ற பிரச்னைகள் ஏற்படுவது கடந்த 40 ஆண்டுகளாக நடந்துவருகிறது. நகரம் வேகமாக வளா்ந்து வருவதால், இதுபோன்ற பிரச்னைகள் எழுகின்றன. மழை பிரச்னைக்குத் தீா்வுகாண தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். பெங்களூரில் 7 ஓடைகளை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. இது முடிவடைந்தால், மழைநீா் சாா்ந்த பிரச்னைகள் ஏற்படாது. இந்தத் திட்டத்திற்கு ரூ. 1,600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். மழைநீா் வடிகால்களில் சூழ்ந்துள்ள தூரை வாருவதற்கு ரூ. 400 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.