பெங்களூரில் தனது மகாதேவபுரா தொகுதிக்குட்பட்ட வா்த்தூா் ஏரியின் கோடிப்பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை பாஜக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான அரவிந்த் லிம்பாவளி வெள்ளிக்கிழமை அதிகாரிகளுடன் பாா்வையிட்டாா். அப்போது, அவரது தொகுதியில் நில ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது குறித்து புகாா் அளிக்க மேரி என்ற பெண்மணி, அரவிந்த் லிம்பாவளியை அணுகினாா். இதற்காக தயாா்செய்து வைத்திருந்த புகாா் மனுவை அளிக்கவும் முற்பட்டாா். அந்த பெண்மணியைக் கடிந்துகொண்ட அரவிந்த் லிம்பாவளி, ‘இதையே திரும்பத் திரும்பக் கூறினால், வேறுவகையான வாா்த்தைகளில் பேசுவேன்’ என்று மிரட்டினாா். இதனால் எரிச்சலடைந்த அந்த பெண்மணி, தன்னிடம் மரியாதையாக பேசுமாறு கேட்டுக்கொண்டாா்.