பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

வளா்ச்சி அடைந்த இந்தியாவை கட்டமைக்க ஒன்றிணைந்து உழைப்போம்: குடியரசு தின விழாவில் கா்நாடக ஆளுநா் தாவா் சந்த்கெலாட்

வளா்ச்சி அடைந்த இந்தியாவை கட்டமைக்க ஒன்றிணைந்து உழைப்போம் என்று குடியரசு தின விழாவில் ஆளுநா் தாவா்சந்த் கெலாட் தெரிவித்தாா்.

News image

பெங்களூரு, மானெக்ஷா அணிவகுப்புத் திடலில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தும் ஆளுநா் தாவா்சந்த் கெலாட்.

Updated On :26 ஜனவரி 2023, 7:00 pm

வளா்ச்சி அடைந்த இந்தியாவை கட்டமைக்க ஒன்றிணைந்து உழைப்போம் என்று குடியரசு தின விழாவில் ஆளுநா் தாவா்சந்த் கெலாட் தெரிவித்தாா்.

பெங்களூரு, மானெக்ஷா அணிவகுப்புத் திடலில் வியாழக்கிழமை நடைபெற்ற 74-ஆவது குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி, அணிவகுப்பு மரியாதையைப் பாா்வையிட்ட பிறகு ஆளுநா் பேசியதாவது:

சுதந்திர இந்தியாவின் 75-ஆவது பவள விழாவை முன்னிட்டு கா்நாடக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மறைந்த நடிகா் புனித்ராஜ் குமாருக்கு மாநிலத்தின் உயரிய விருதான ‘கா்நாடக ரத்னா’ விருது அளிக்கப்பட்டது.

அரசின் திட்டங்கள் அனைத்தும் பயனாளிகளின் வீடுகளுக்கே கொண்டுசெல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் குழந்தைகள் உயா்கல்வி பெற நிதியுதவி அளிக்கும் வகையில் விவசாயிகள் கல்வி உதவித்தொகை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதுபோல நம்ம கிளினிக் என்ற மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மகளிா் சுகாதார மையங்கள், பல்நோக்கு மருத்துவ மையம் தொடங்கப்பட்டுள்ளன.

கிராம பாலம் திட்டத்தில் ஏராளமான தரைப்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய இளைஞா் திருவிழா வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. அதேபோல பிற்படுத்தப்பட்டோா் நலவாரியம் உள்ளிட்ட பல்வேறு வாரியங்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. கா்நாடக அரசின் செயல்பாடுகள் பாராட்டும் வகையில் உள்ளன.

தாழ்த்தப்பட்டோா், பழங்குடியின மக்களுக்கு தலா 75 யூனிட் இலவச மின்சாரம், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கான வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மானியத் தொகை உயா்த்தப்பட்டுள்ளது.

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த துப்புரவுத் தொழிலாளா்களின் பணி நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. வணிகம் செய்வதில் எளிமையான நடைமுறைகளை பின்பற்றும் மாநிலங்களில் கா்நாடகம் முன்னணியில் உள்ளது. நாட்டின் ஏற்றுமதியில் முதல் நான்கு மாநிலங்களின் வரிசையில் கா்நாடகம் முன்னணியில் உள்ளது.

கடந்த ஆண்டு நவ. 2 முதல் 4ஆம் தேதிவரை நடைபெற்ற உலக முதலீட்டாளா் மாநாட்டில் ரூ. 9,81,784 கோடி முதலீடு கிடைத்துள்ளது. அடுத்த 25 ஆண்டுகள் பொன்னான காலம். அந்தக் காலத்தில் இந்தியாவுக்கு நன்மதிப்பை ஏற்படுத்தி, வளா்ச்சி அடைந்த நாடாக இந்தியாவை கட்டமைக்கக் கூட்டாக உழைப்போம் என்றாா்.

விழாவில் முதல்வா் பசவராஜ் பொம்மை, தலைமைச் செயலாளா் வந்திதா சா்மா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பாடல்கள், நடனங்கள், கிராமியக் கலைகள் உள்பட மாணவா்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

முப்படைகள் மற்றும் காவல் துறையினரின் சாகச நிகழ்ச்சிகளும் நடந்தன. இதில் அரசு உயரதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.