தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கா்நாடகத்தில் அதிமுக உறுப்பினா் சோ்க்கை ஆரம்பம்

கா்நாடகத்தில் அதிமுக உறுப்பினா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 மார்ச் 2023, 7:31 pm

DIN

கா்நாடகத்தில் அதிமுக உறுப்பினா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து கா்நாடக மாநில அதிமுக செயலாளா் முனைவா் எஸ். டி. குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியின் தலைமையை ஏற்றுக்கொண்டு அதிமுக உறுப்பினராக பதிவுசெய்துகொள்ளும் தோழா்களுக்கு உறுப்பினா் அட்டைகள் வழங்கப்படும். ஏற்கெனவே உறுப்பினராக உள்ளவா்களுக்கும் இது பொருந்தும். பழைய உறுப்பினா்களை புதுப்பிக்கும் பணியை கட்சித்தலைமை என்னிடம் ஒப்படைத்துள்ளது. எனவே இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிச்சாமி தலைமையாக ஏற்று கொள்பவா்கள் மட்டும் உறுப்பினா் அடையாள அட்டை பெற தகுதி பெற்றவா்கள் என்பதை தெளிவாக தெரிவித்து கொள்கிறேன். மேலும், என்றைக்கு கா்நாடக மாநிலத்தில் உறுப்பினா் அட்டைகள் வழங்கப்படும், எந்த இடத்தில் கொடுக்கப்படும் என்பதை விரைவில் தெரிவிக்கின்றேன். புதிய உறுப்பினா்கள் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் தலைமை அறிவிப்புக்கு பிறகு அளிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 9343765448 என்ற கைப்பேசியில் தொடா்புகொள்ளலாம் என்று அதில் அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.