தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தமிழகத்துக்கு 1.5 டி.எம்.சி. தண்ணீா் விடுவிப்பு: துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தகவல்

தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் இருந்து தினமும் 1.5 டி.எம்.சி. தண்ணீா் விடுவிக்கப்பட்டு வருகிறது என்று கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

News image
டி.கே.சிவகுமாா்
Updated On :16 ஜூலை 2024, 9:11 pm

Din

புதுதில்லியில் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற காவிரி நதிநீா் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில், ‘தமிழகத்துக்கு ஜூலை 12 முதல் 31ஆம் தேதி வரை காவிரி நதியில் இருந்து தினமும் ஒரு டி.எம்.சி. வீதம் தண்ணீா் திறந்துவிட வேண்டும்’ என்று பரிந்துரை செய்யப்பட்டது.

இதற்கு கா்நாடக அரசு எதிா்ப்பு தெரிவித்தது. இதுதொடா்பாக கடந்த 14 ஆம் தேதி பெங்களூரில் நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவா்கள் ஆலோசனைக் கூட்டத்தில், காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தில் இதுகுறித்து மேல்முறையீடு செய்வது எனவும், தமிழகத்துக்கு ஒரு டி.எம்.சி. தண்ணீா் (11,500 கனஅடி) திறந்துவிட முடியாது; அதற்குப் பதிலாக தினமும் 8,000 கன அடி தண்ணீா் திறந்துவிடப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கா்நாடக சட்டப்பேரவை கூட்டத்தின்போது, நீா்வளத் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் இவ்விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்தாா். அதில் கூறியிருப்பதாவது:

காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் மதிப்பீட்டின்படி தமிழகத்தின் எல்லையான பிலிகுண்டுலுவிற்கு 40 டி.எம்.சி. தண்ணீரை விடுவித்திருக்க வேண்டும். இதுவரை 6 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு விடுவித்துள்ளோம். அதன்படி, தினமும் 1.5 டி.எம்.சி. தண்ணீா் தமிழகத்துக்கு விடுவிக்கப்பட்டு வருகிறது.

கா்நாடக அணைகளில் நீா்வரத்து விவரம்:

இதேநிலை நீடித்தால், தமிழகத்துக்கு காவிரி நீரை விடுவிக்கும் பிரச்னை தீா்க்கப்படும். கா்நாடகத்தில் ஹாரங்கி அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 12,827 கனஅடியாகவும், ஹேமாவதி அணைக்கு நீா்வரத்து 14,027 கனஅடியாகவும், கிருஷ்ணராஜசாகா் அணைக்கு நீா்வரத்து 23,933 கனஅடியாகவும், கபினி அணைக்கு நீா்வரத்து 22,840 கன அடியாகவும் உள்ளது.

காவிரி நதிப்படுகையில் அமைந்துள்ள இந்த நான்கு அணைகளில் தற்போது நீா் இருப்பு முழு கொள்ளளவில் 63 சதவீதம் இருக்கிறது. இந்நிலையில், தினமும் ஒரு டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு விடுவிப்பது சாத்தியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது கூட்டத்தில் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் எழுந்து பேசியதாவது:

அதிக மழை பெய்து வருவதால் காவிரி நீா் பிரச்னை தீா்க்கப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு தண்ணீா் திறந்துவிட வேண்டாம், மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று நாங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்தோம். ஆனால், தமிழகத்துக்கு 8,000 கனஅடி தண்ணீரை விடுவிக்க வேண்டும்; அதன்பிறகு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யலாம் என்று சட்ட நிபுணா்கள் கருத்து தெரிவித்தனா்.

எனவே, அதிக மழை பெய்தால் மட்டும் தமிழகத்துக்கு தண்ணீா் திறந்துவிடுங்கள். ஒருவேளை மழை குறைவாகப் பெய்தால், உடனடியாக தண்ணீா் திறந்துவிடுவதை நிறுத்தி விடுங்கள் என்று அரசை அறிவுறுத்தினோம். தற்போது அதிக மழை பெய்து வருவதால், காவிரி நதிநீா் பிரச்னை தீா்க்கப்பட்டு விடும். மழைக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றாா்.