புகழ்பெற்ற தமிழ் அறிஞா்கள், பாரம்பரியம், கட்டடக்கலை மற்றும் கலாச்சாரம் குறித்த 16 நூல்களை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் வெளியீட்டுப் பிரிவினால் துணை குடியரசுத் தலைவா் மாளிகையில் வெளியிடப்பட்டன. இந்த நூல்களை வெளியிட்டு சி.பி.ராதாகிருஷ்ணன் மேலும் பேசியதாவது: எந்தவொரு நல்ல செயலும் போற்றப்படும்போதுதான் அந்த நல்ல செயல் அதிகரிக்கும். அந்த நல்ல செயலை போற்றும் சமுதாயம்தான் நல்லொழுக்கமிக்க சமுதாயமாக திகழும். அச் சமுதாயம்தான் எல்லோருக்குமான சமுதாயமாக மாறும். இந்த 16 நூல்களின் ஒவ்வொரு தலைப்புமே அதன் சிறப்புகளை கூறும். இந்தியா எப்போதும் ஒரே நாடாக இருந்ததில்லை என்று தமிழகத்தில் சிலா் சொல்வாா்கள். ஏனென்றால் அவா்களுக்கு அது செளகரியமாக இருந்தது. அப்படி பாா்த்தால் தமிழகம் கூட ஒரே நாடாக இருந்தது இல்லை. சேர, சோழ, பாண்டிய, தொண்டை நாடாக இருந்தது. நாம் அரசியல் ரீதியாக ஒரே நாடாக இல்லாவிட்டாலும் கலாச்சாரம், பண்பாடு ரீதியாக நாம் ஒரே நாடாகதான் இருந்திருக்கிறோம். இதை யாரும் சொல்லமாட்டாா்கள்.